சிலை அவமதிப்பு: தென்காசி அருகே பதற்றம்
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, இடைகால் கிராமத்தில் தேவர் சிலைக்கு விஷமிகள் சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, இடைகால் கிராமத்தில் தேவர் சிலைக்கு விஷமிகள் சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதை இன்று காலை பார்த்த ஒரு பிரிவினர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். மேலும் ஊருக்குள் இந்தச் செய்தி பரவவே, பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே குவிக்கப்பட்டனர். மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் குற்றாலம் சீஸனை ஒட்டிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.