பேருந்து மீது பைக் மோதி விபத்து: 2 பேர் பலி
நெல்லை மாவட்டம் புளியங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக் (35). அதே ஊர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் கலீல் (33) ஆகிய 2 பேரும் குற்றாலத்திற்கு சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பும்
நெல்லை மாவட்டம் புளியங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக் (35). அதே ஊர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் கலீல் (33) ஆகிய 2 பேரும் குற்றாலத்திற்கு சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பும் போது, கடையநல்லூர் அருகே தர்மாபுரம் பகுதியில் வந்தபோது முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றனர்.அப்போது எதிரே திருச்சியிலிருந்து குற்றாலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதினர். இந்த விபத்தில் பைக்கில் வந்த முகமது ரபிக்,கலீல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இது குறித்து சொக்கம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் திருச்சி மேலசிந்தாமணி காவேரிநகரை சேர்ந்த கருணாகரன்(48) என்பவரை கைது செய்தனர்.