கடலூரில் கடையடைப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது
டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM
டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து காலை முதல் வழக்கம்போல் இருந்தது. ஆட்டோக்கள் இயங்கின. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் ஆட்டோக்களை இயக்கவில்லை. சாலைமறியல் போராட்டங்களில் திமுகவினர் ஆங்காங்கே ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.