குமுளிக்கு சுற்றுலா வந்த கேரள மருத்துவர்கள் 4 பேர் பலி
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:03 PM
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
குமுளியை அடுத்த இடுக்கி அருகே வாகமன் என்ற பகுதியில் அவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், மருத்துவர்கள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement