முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜிகே மணி கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமீன் வழங்கினார் நீதிபதி

வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

Updated On : 9 மே, 2013 at 1:13 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:11 PM

பாமக தலைவர் ஜிகே மணி, இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஜனவரியில் அனைத்து சமுதாய மாநாட்டை கடலூரில் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனைஎதிர்த்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாமகவினர். அதே நாளில் எதிரில் அதிமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஒரு மாநாடு நடைபெற்றது. இதில், இருதரப்பும் மோதிக்கொண்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜி.கே.மணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ன் நீதிபதி பிரபா உத்தரவிட்டிருந்தார். இன்று அவர் நீதிபதி முன் ஆஜரானார். இதில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கெனவே 5 வழக்கில் ஜாமீன் பெற்றுவிட்டதால், இன்று மாலை அவர் ஜாமினில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, மரக்காணம் கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து பஸ் எரிப்பு ஆகிவை தொடர்பாக மீண்டும் சிறையில் தள்ள வாய்ப்பு உள்ளது. மரக்காணம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. அதிமுக, திமுக என்ற கட்சி பேதமில்லாமல் வன்னியர் என்றாலே பிடித்து உள்ளே போடுகிறார்கள்.

Advertisement

வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.