காதல் திருமணம் செய்த நர்சிங் மாணவி தற்கொலை
வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி
வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்த சபரீஷ் கடந்த ஆண்டு இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியது. சபரீஷ்- சரண்யா இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து தனிக்குடித்தனம் இருந்தனர். இதுபற்றி சரண்யாவின் பெற்றோருக்கு 6 மாதத்திற்கு பின்பே தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சபரீஷ் மனைவியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த சரண்யா மண்எண்ணையை குடித்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சரண்யா உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.