சங்கரராமன் கொலை வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது புதுச்சேரி நீதிமன்றம்.சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது புதுச்சேரி நீதிமன்றம்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீர்ப்பை வழங்குவது குறித்து நீதிபதி கருத்து கேட்டதற்கு, தீர்ப்பை வழங்குவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சங்கரராமனின் மகன் கூறினார்.
இதையடுத்து, கொலை வழக்கின் தீர்ப்பை வரும் 12ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.