சங்கரராமன் கொலை வழக்கு : 27ம் தேதி தீர்ப்பு
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், வரும் 27ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், வரும் 27ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொலை வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை அறிவிக்க செவ்வாயன்று நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கொல்லப்பட்ட சங்கரராமன் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.