போலி நகை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் நகைக் கடையில் போலி நகைகளைக் கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் நகைக் கடையில் போலி நகைகளைக் கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மாதங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை ஆசாரி மகன் திருப்பதி. இவர் வத்திராயிருப்பில் அமிர்தா ஜூவல்லரி என்ற நகைக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு 4.1.20012-ம் தேதி வந்த அடையாளம் தெரியாத நபர், கொத்தாக பழைய நகைகளைக் கொண்டுவந்து கொடுத்து, விற்க வேண்டும் என்றுள்ளார். இதனை பரிசோதித்த திருப்பதி, தங்கம் என்று தெரிந்ததால், ரூ.7 லட்சத்திற்கு நகை போகும் என்றுள்ளார்.
இதனையடுத்து வந்த நபருக்கு, திருப்பதி ரூ.5 லட்சத்திற்கு வெள்ளியும் மேலும் ரூ.2 லட்சமும் கொடுத்துள்ளார். வந்த நபர் வெளியே சென்ற பின்பு சில நகைகளை திருப்பதி பரிசோதித்துப் பார்த்தாராம். அது போலி என தெரியவந்துள்ளது. அக்கம் பக்கம் போய் வந்த நபரைத் தேடி பார்த்தபோது அவரைக் காணவில்லையாம். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாம்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் திருப்பதி மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.