மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவர் கைது
வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு கவின்(5), தமிழ்க்குமரன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கும், அனிதாவுக்கும்
வந்தவாசி அருகே மனைவியை தீவைத்துக் கொளுத்தியதாக கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு கவின்(5), தமிழ்க்குமரன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கும், அனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அனிதாவை முருகன் தாக்கினாராம்.
இதில் வேதனை அடைந்த அனிதா தான் சாகப்போகிறேன் என்று கூறி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றினாராம். இதைக் கண்ட முருகன், மண்ணெண்ணை கேனில் மீதமிருந்த மண்ணெண்ணையையும் அனிதா மீது ஊற்றி தீவைத்தாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அனிதா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்பேரில் முருகன் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்த வடவணக்கம்பாடி போலீஸார் அவரை கைது செய்தனர்.