சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சுமுகமான ரயில் சேவையை வழங்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம்; செங்கல்பட்டு - திருமால்பூர் வழித் தடத்தில் ஓடும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் அனைத்தும் இனி 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால் இனி அதிக அளவில் பயணிகள் பயணம் செய்ய முடியும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement