குடிநீர் கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்!
காட்டுமன்னார்கோயில் 4வது வார்டு பகுதியில் உள்ள மினிபவர் பம்பு மற்றும் குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் மாற்ற முற்படுவதை கண்டித்தும், சரியாக குடிநீர் வழங்கக் கோரியும்
காட்டுமன்னார்கோயிலில் குடிநீர் சரியாக வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் 4வது வார்டு பகுதியில் உள்ள மினிபவர் பம்பு மற்றும் குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் மாற்ற முற்படுவதை கண்டித்தும், சரியாக குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி மக்கள் காலி குடங்களும் தெற்கிருப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் வாபஸ் பெறப்பட்டது.