தேர்தல் விதி மீறல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போதைய செய்திகள்தேர்தல் விதி மீறல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் பஸ் நிறுத்தத்தில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் செவ்வாய்கிழமை இரவு 10.20 மணியளவில், தேர்தல் விதி முறைகதளுக்கு முரணாக மூன்று வாகனங்களுக்கு மேல் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதனை அங்கிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் அலுவலக கண்காணிப்பாளரும், சட்ட மன்றத் தொகுதி நிர்வாக நடுவருமான நமச்சிவாயம் (45) இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதனையும் மீறி அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் நமச்சிவாயம் புதன்கிழமை புகார் செய்தார். போலீஸார் கிருஷ்ணசாமி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற கவுன்சிலர்கள் தங்கமாங்கனி, செல்வமணி, அய்யாவுப்பாண்டியன் மற்றும் ஜான்ராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.