நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டுபிரசுரம் அடித்து அதிமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு
ஜவகர்லால்நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், எழுத்தாளருமான ஜெயபாலன்
ஜவகர்லால்நேரு குடும்பத்தினர் பெயரில் 27 திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், எழுத்தாளருமான ஜெயபாலன் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
துண்டு பிரசுரத்தில் இதுதான் ஜனநாயகமா? மத்தியஅரசின் 58 திட்டங்களில் நேரு பெயரில் 3 திட்டங்கள், இந்திராகாந்தி பெயரில் 8 திட்டங்கள், ராஜீவ்காந்தி பெயரில் 16 திட்டங்கள் என 27 திட்டங்கள் உள்ளன. மகாத்மா காந்தி பெயரில் 4 திட்டங்கள், அம்பேத்கர் பெயரில் 4 திட்டங்கள், அபுல்கால்ஆசாத் பெயரில் 3 திட்டங்கள், லால்பகதூர் சாஸ்திரி பெயரில் 2 திட்டங்கள், கஸ்தூரிபா காந்தி, வல்லபாய் பட்டேல், ஜாகீர்உசேன், ரவீந்திரநாத்தாகூர், ஜெகஜீவன்ராம், வாஜ்பாயி உள்ளிட்ட மற்றவர்கள் பெயரில் 12 திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் தோன்றிய தலைவர்கள் தேசத் துரோகிகளா? தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க அதிமுகவை ஆதரிப்பீர் என துண்டு பிரசுரத்தில் எழுத்தாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.