தொழில்சங்க தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தருமபுரி நகரைச் சேர்ந்தவர் மாது. இவர் ஆட்டோ சங்கத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான ஆட்டோவை மர்ம நபர் ஒருவர் தருமபுரி வெண்ணாம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட்
தருமபுரி சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக தருமபுரி நகர சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி நகரைச் சேர்ந்தவர் மாது. இவர் ஆட்டோ சங்கத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான ஆட்டோவை மர்ம நபர் ஒருவர் தருமபுரி வெண்ணாம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ஓட்டிச் சென்றார். இது தொடர்பாக மாது தனது ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியே வந்த தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், மாதுவையும், ஆட்டோ ஓட்டி வந்தவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, உதவிக் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மாது மீது தாக்குதல் நடத்தினார். இதில் அவர் காயடமடைந்தார்.
எனவே, ஆட்டோ தொழில்சங்கத் தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதில், மாவட்டச் செயலாளர் நகராஜன், நிர்வாகிகள் விஜயன், சுந்தரமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.