முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சாபுரத்தில் 150 ஆண்டு பழமையான ஆலமரத்தில் தீ: தென்னை, வாழை மரங்கள் தீயில் கருகின

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர்

தற்போதைய செய்திகள்

மம்சாபுரத்தில் 150 ஆண்டு பழமையான ஆலமரத்தில் தீ: தென்னை, வாழை மரங்கள் தீயில் கருகின

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:04 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மம்சாபுரம், வாழைக்குளம் கண்மாய் கரையில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதன் அருகே மயானம் உள்ளது. மரத்தையொட்டியுள்ள முள் வேலியில் யாரோ தீ வைத்துள்ளார்கள். இத் தீ ஆலமரத்தின் விழுதுகள் வழியே பிடித்து மரம் எரிய ஆரம்பித்தது. மேலும் இந்தத் தீ அருகில் உள்ள முன்னாள் ராணுவ வீரரான கொத்தாலத்தேவர் என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களிலும் பரவி பிடித்து. இந்த வெப்பத்தில் அருகில் இருந்த வாழை மரங்களும் கருகின.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீயினால் கொத்தாலத்தேவர் தோட்டத்தில் உள்ள 8 தென்னை மரங்கள் மற்றும் 6 வாழை மரங்கள் கருகின. மேலும் ஆலமரமும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்தத் தீயை யார் வைத்தது என்பது குறித்து மம்சாபுரம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →