பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:34 AM
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கியது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடந்தது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.