10ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற கோரிக்கை
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சிவக்குமார் கூறியது: பள்ளிக் கல்வித் துறை வெளியிடுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், வரும் மார்ச் 19-ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வும், 4 நாட்கள் இடைவெளிக்குப் பின் மார்ச் 24-ம் தேதி தமிழ் 2-ம் தாள் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 26-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு அடுத்து, போதிய கால இடைவெளியின்றி தொடர்ந்து ஆங்கிலம் முதல் தாள் மற்றும் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு சரியும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மொழிப் பாட தேர்வுகளுக்கு இடையே போதி கால அவகாசம் அளித்து, தேர்வு கால அட்டவணையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்க கழகம் சார்பில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
Advertisement