இலங்கையில் இருந்து சிறைமீண்ட 69 மீனவர்கள் காரைக்கால் வருகை
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 69 பேர் இன்று காலை 15 படகுகளில் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று காலை 7 மணிக்கு வந்து சேர்ந்த அவர்களை நாகை மாவட்ட முனுசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.