குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை
விவசாயிகளின் வாழ்தை உயர்த்தப் போவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த நரேந்திரமோடி சாகுபடி செலவை கணக்கில் கொண்டு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
விவசாயிகளின் வாழ்தை உயர்த்தப் போவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த நரேந்திரமோடி சாகுபடி செலவை கணக்கில் கொண்டு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இடுபொருள் விலை உயர்வாலும், கூலி உயர்வாலும் சென்ற ஆண்டு ஆன செலவைவிட இந்த ஆண்டு ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூ 1800 வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு சராசரி விளைச்சல் 18 குவிண்டால் நெல் என எடுத்துக் கொண்டாலும் ரூ.100 அதிகம் செலவாகிறது. ஆனால் மத்தியஅரசோ குவிண்டாலுக்கு ரூ50 மட்டுமே உயர்த்தியுள்ளது விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்யும். சாகுபடி செலவை கணக்கிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கக் கோரி தமிழக உழவர் முன்னணி போராடுகிறது. எனவே குவிண்டால் நெல்லுக்கு ரூ.2650 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிக்கையில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.