முதியவர் மீது சுடுநீரை ஊற்றிய தம்பதியினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர் ராயர் (60). அவபது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த செடிகளை ஆடு மேய்ந்தது தொடர்பாக, தானாகவே திட்டிக்கொண்டு அமர்ந்திருந்துள்ளார். அப்போது அருகாமையில் வசிக்கும்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் முதியவர் மீது சுடுநீரை ஊற்றிய தம்பதியினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர் ராயர் (60). அவபது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த செடிகளை ஆடு மேய்ந்தது தொடர்பாக, தானாகவே திட்டிக்கொண்டு அமர்ந்திருந்துள்ளார். அப்போது அருகாமையில் வசிக்கும் ராமசாமி, அவரது மனைவி சுந்தரி ஆகியோர் தங்களை தான் ராயர் திட்டுகிறார் என நினைத்து அவரசை ஆபாச வார்த்தைகளால் திட்டு சுடுநீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமுற்ற ராயர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் சுடுநீர் ஊற்றிய தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.