முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வடிகால் வாய்க்காலில் பிடிபட்ட முதலை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரகுடி வடிகால் வாய்க்காலில் முதலை ஒன்று இருந்து கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இதனையறிந்த ஊர்மக்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வடிகால் வாய்க்காலில் இருந்த முதலையை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரகுடி வடிகால் வாய்க்காலில் முதலை ஒன்று இருந்து கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இதனையறிந்த ஊர்மக்கள் நாலரை அடி நீளமும், 25 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப்போட்டு, தீயணைப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று முதலையை பிடித்து கொண்டு வந்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கி ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.