ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செவ்வாய்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செவ்வாய்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செவ்வாய்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நா.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார். ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.மாணவ மாணவியரின் 40-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பாக காமராஜர் குறித்து எடுத்துரைத்த 5-ம் வகுப்பு மாணவிகள் மா.இசக்கிராணி, அ.அமலா, 2-ம் வகுப்பு மாணவிகள் சந்தனமாரி, முத்துப்பேச்சி ஆகியோருக்கு ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவர் அ.கனியம்மாள் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5-ம் வகுப்பு மாணவர் வேல்முருகன் நன்றி கூறினார்.