திருக்கோவிலூர் அருகே சாலை மறியல்: தேமுதிகவினர் 300 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் திருவண்ணாமலை-தியாகதுருகம் இடையே தஞ்சாவூரான் சாலையை இணைக்கும் வகையில் தென்பெண்ணையாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கவும், மணலூர்பேட்டையில் இருந்து ஜம்பை, காங்கியனூர், மேலந்தல் வழியாக மூங்கில்துறைப்பட்டு செல்லும் பிரதான சாலையை செப்பனிட வேண்டியும் சாலை மறியல் நடைபெற்றது.
தேமுதிக மாவட்டச் செயலரும், திருக்கோவிலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எல்.வெங்கடேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் உள்பட சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் போலீஸாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.