தேனியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தேனியில் திங்கள்கிழமை அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்து தங்கச்
தேனியில் திங்கள்கிழமை அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்து தங்கச் சங்கலியை பறித்துச் சென்றுவிóடதாகதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி, கே.ஆர்.ஆர்.நகர் 4-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மனைவி செல்வராணி(55). இவர், அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தாராம். அப்பாúது, இரு சக்கர வாகனத்தில் வந்த 20 வயது மதிக்கத் தக்க 2 பேர், கே.ஆர்.ஆர்.நகர் 3-வது குறுக்குத் தெரு சந்திப்பு பகுதியில் செல்வராணியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.
இது குறித்து செல்வராணி அளித்த புகாரின் மீது, தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement