தேனியில் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:04 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற புவிராஜனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.
Advertisement