சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கி நவீனமயம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கி ரூ.15 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்டதை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கி ரூ.15 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்டதை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வியாழக்கிழமை கூட்டுறவு நகர வங்கியில், வங்கித் தலைவர் சொ.ஜவகர் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் டி.ராஜேந்திரன், வங்கி மேலாண்மை இயக்குநர் என்.சந்திரிகா, எம்.மனோகர், பொதுமேலாளர் ஜி.கணேசமூர்த்தி, வங்கி துணைத் தலைவர் டேங்க் ஆர்.சன்முகம், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.எஸ்.சேகர், நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம், பால்வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.