ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மீனபிடிக்க கடலுக்கு தங்கச்சிமடத்தை சேர்ந்த தேவசகாயம்,ஆரோக்கியதாஸ் ஆகியோர்களின் படகுகளில் சென்ற நிலன்,கிறிஸ்டோபர்,கெட்சோன்,கிளிண்டன்,ரிகால்டன்,நாகு,மோகன்,நம்புராஜன்,முருகன் ஆகிய 9 மீனவர்களையும் தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 13 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன்படி 9 மீனவர்களையும் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Advertisement
மீனவர்களின் வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்தி கனக ரெத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்னும் ஒரு சில நாள்களில் ராமேசுவரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.