முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் கைது

உத்தமபாளையம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலை

Updated On : 28 மார்ச், 2014 at 8:04 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:20 AM

உத்தமபாளையம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

      ஆணைமலையன்பட்டி, சர்ச்தெருவைத் சேர்ந்த புஷ்பராஜ் மகள் சாந்தினி(29). இவர், இதே ஊரைச் சேர்ந்த முடியப்பன் மகன்  பிரவீண்ராஜ்குமார்(28) என்வரை காதலித்து வந்தாராம். பிரவீண்ராஜ்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவர் கேட்ட போதெல்லாம் அவரது வங்கிக் கணக்கு மூலம் பணம் கொடுத்ததாகவும், தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தினி புகார் அளித்தார்.

      இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து பிரவீண்ராஜ்குமாரை கைது செய்தனர்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.