மணப்பாறை அருகே 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
மணப்பாறை அருகே ஒரு தாய் குடும்ப தகராறு காரணாமாக 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மணப்பாறை அருகே ஒரு தாய் குடும்ப தகராறு காரணாமாக 3 குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மணப்பாறை அடுத்து புத்தாநத்தம் கம்பிளியம்பட்டி என்ற ஊரில் வசிக்கும் முத்தழகன் என்பவரின் மவைவி மீனா 28 இவர்களுக்கு சரஸ்வதி 7 சத்யா 3 தனலட்சுமி 1 மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீனா தனது குழந்தைகள் சரஸ்வதி, சத்யா, தனலட்சுமி, ஆகியோருக்கும் மண்ணெண்னை ஊற்றி தீவைத்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் மீனா, சத்தியா, சரஸ்வஸ்தி, ஆகியோர் உடல் கருகி பலியாகினர். தனலட்சுமி என்ற குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்