முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே பள்ளியின் ஜன்னலை உடைத்து கணினி திருட்டு

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஆசிரியர்கள்  வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.வார விடுமுறை நாட்களான

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளியின் ஜன்னலை உடைத்து கணினியை  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஆசிரியர்கள்  வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.வார விடுமுறை நாட்களான இரு தினங்கள் பள்ளி பூட்டியிறுந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை அன்புச்செல்வி பள்ளியை திறந்து பார்த்தபோது கட்டடத்தின் பின்புறமுள்ள சிமெண்டினால் ஆன (கிராதி) ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கணினி திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை அன்புச்செல்வி அளித்த புகாரையடுத்து காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் வழக்குப் பதிந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →