நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு
ஆலங்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சனிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சனிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குடி தைகால் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் ராவுத்தர் கனி (34).இவர் சனிக்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை செல்வதற்காக ஆலங்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.அப்போது மாங்காடு பூச்சிகடை அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மீது எதிர்பாராத விதமாக ராவுத்தர் கனியின் மோட்டார் சைக்கிள் மோதியது.இதனால் படு காயமடைந்த ராவுத்தர் கனி சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த வடகாடு போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் வேலூர் மாவட்டம் வடுவன்தாங்கலைச் சேர்ந்த அப்புனி மகன் முனுசாமி (40)-யை கைது செய்தனர்.