முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். 6-ம் ஆண்டு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன்

தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். 6-ம் ஆண்டு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:22 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான சிறப்பு 6 ஆண்டு பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதன்கிழமை துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் வரவேற்றார். சென்னை, செர்வ் சென்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபா வளாக நேர்காணலை நடத்தினார். இதில் சிறப்பு பிரிவின் 17 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னர் இறுதியாக 5 பேர் வேலைக்கு தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இவர்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் சென்னையில் பணியில் சேர வேண்டும்.

பணி நியமனம் பெற்ற மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →