விராலிமலையில் மனைவியை காணவில்லை: கணவர் போலிஸில் புகார்
மனைவியை காணவில்லை என்று விராலிமலை காவல் நிலையத்தில் கணவர் இன்று புகார் அளித்துள்ளார்.
மனைவியை காணவில்லை என்று விராலிமலை காவல் நிலையத்தில் கணவர் இன்று புகார் அளித்துள்ளார்.
விராலிமலை அருகே உள்ள ராசநாயக்கன்பட்டி களத்துப்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி(59). இவரது மனைவி மாரியம்மாள்(53) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆக, 6- ம் தேதி இரவு வீட்டில் இருந்தவர் காலையில் காணவில்லையாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாசி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரினை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.