சிவகாசியில் பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்சிவகாசியில் பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சிவகாசி மேற்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருபவர் ரா.முத்துராஜ் (51). இவர் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, பாறைபட்டியில் உள்ள அரசு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.
இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள். மாலை வீட்டிற்கு விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயுள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து எட்டே கால் பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் முத்துராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.