ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக செயின் பெண்ணின் சட்டைக்குள்ளே விழுந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக செயின் பெண்ணின் சட்டைக்குள்ளே விழுந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக செயின் பெண்ணின் சட்டைக்குள்ளே விழுந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி-ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சௌ.முனீஸ்வரி (22). இவர் திங்கள்கிழமை மாலை திருமுக்குளம் தென்கரை வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சேர்ந்து முனீஸ்வரி அணிந்திருந்த செயினை பறித்துள்ளார்கள். செயின் அறுந்து முனீஸ்வரியின் சட்டைக்குள்ளேயே விழுந்துள்ளது.
முனீஸ்வரி கூக்குரலிடவே, சம்பவத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். பகலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீஸார் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகிறார்கள்.