முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:14 PM
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 141.70 அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர், 511 கன அடியில் இருந்து 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,696 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 7,585 மில்லியன் கன அடி.பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேக்கடியில் தொடர் மழை.