வெள்ள நிவாரண பொருட்கள் ஏற்றிவரும் வாகனத்தை வழிப்பறி செய்யும் விஷமிகள்: போலீஸார் பாதுகாப்பு
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்புக்குளான சென்னை,
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்புக்குளான சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.
சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என பல்வேறு பகுதிகளீல் இருந்து கொண்டுவரும் நிவாரணப் பொருட்களை சில விஷமிகள் வழிமறித்து பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு வரும் நிவாரணப்பொருட்கள் ஏற்றிய வாகனத்தை நிறுத்தி வைத்து 10 வாகனங்கள் சேர்ந்த பின் கடலூர் மாவட்டத்துக்குள் போலீஸார் அனுப்பிவைக்கின்றன.