முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

இதன் வழியே ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனர்.

பின்னர் பரமபதவாசல் திறப்பு நடைபெற்று ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தல் நடைபெற்றது. மாடவீதி, கந்தாடைவீதிகள் வழியே சுவாமிகள் எழுந்தருளி ராப்பத்து மண்டபம் சேருதல் நடைபெற்றது.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழித் தொடக்கம் நடைபெற்று அரையர் அருளிப்பாடு நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தில் உயர்வற உயர்நலம் என்ற அரையர் வியாக்யானம் நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி முத்துராஜ், மாவட்ட அதிமுக பொருளாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →