அரசுப் பணியாளர் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரம்
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்அரசுப் பணியாளர் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரம்
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலை இன்று அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.காமராஜ், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சங்கங்கள் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக நாட்காட்டி அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும். நடப்பு ஆண்டு தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும் மழை, வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதற்கு பயன்படுத்தும் நிதியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் ரூ.60 ஆயிரத்திற்கான வரைவோலையை சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.