முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருதுகள்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருது கிடைத்துள்ளது.

தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருதுகள்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருது கிடைத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருது கிடைத்துள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் 53-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை பயோ மெடிக்கல் துறையில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி மலர்களில் வெளியிட்டுள்ளார். மேலும் 5-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்று ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் வீனஸ் சர்வதேச நிறுவனம் இவருக்கு 2015-ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது வழங்கியுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் முனைவர் என்.செல்வபழம். இவர் புற்று நோயைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அதற்கான நானோ துகள்கள் அடங்கிய மருந்துகள் குறித்த 38 ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச மலரில் வெளிட்டுள்ளார். மேலும் சர்வதேச 21 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். இவரைப் பாராட்டி வீனஸ் இன்டர் நேஷனல் நிறுவனம் பிரத்யேக ஆராய்ச்சியாளர் விருது வழங்கியது.

விருது, கேடயம் மற்றும் சான்றிதழை சென்னையில் நடைபெற்ற விழாவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டி.விஸ்வநாதன் வழங்கினார்.

விழாவில் வீனஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சதீஸ்குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், முன்னாள் மாவட்ட நீதிபதி எம்.புகழேந்தி, கல்பாக்கம் அணு மின்நிலைய விஞ்ஞானி வைதேகி கணேசன் ஆகியோர் விருது பெற்ற பேராசிரியர்களைப் பாராட்டினர்.

விருது பெற்றுத் திரும்பிய பேராசிரியர்களை புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர்கள் டாக்டர் சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →