தற்போதைய செய்திகள்

சிவராத்தி விழாவுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிவராத்தியன்று இரவு கோயிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டினை

ராஜேஷ் கண்ணா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிவராத்தியன்று இரவு கோயிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டினை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தினை திருடர்கள் திருடி விட்டு தப்பியோடினர்.

லால்குடி அருகேயுள்ள வாளாடி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (67). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்கிழமை இரவு சிவராத்தியன்று அப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு நன்பர்களுடன் சென்று விட்டு அதிகாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகை திருட்டுóபபோனது தெரியவந்தது.

இந்த திருட்டு தொடர்பாக லால்குடி போலீஸில் சங்கரன் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT