முகப்பு
தற்போதைய செய்திகள்

சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி

தில்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் இலக்கிய ஆய்வுகட்டுரைப் போட்டி நடத்தப்படுகின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

தில்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் இலக்கிய ஆய்வுகட்டுரைப் போட்டி நடத்தப்படுகின்றன.

சிறந்த கட்டுரைகளை தொகுத்து தனி நூலாக தில்லைத் தமிழ்ச்சங்கம் வெளியிடவுள்ளது. நூல் வெளியீடு பின்னர் தனிவிழாவாக நடத்தப்படும் என தில்தைத் தமிழ்ச்சங்க நிர்வாகி ஆடிட்டர் மணி தெரிவித்தார்.

தேர்வாகும் கட்டுரைகளில் மிகச்சிறந்த கட்டுரையாளர் ஒருவருக்கு இரண்டு கிராம் தங்கக்காசுகள் பரிசாக அளிக்கப்படவுளளது. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும், தட்டச்சு அல்லது கணினி பதிவெனில் 20 பக்கங்களுக்கு மிகாமலும், கையெழுத்து பதிவெனில் 30 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரை இருக்க வேண்டும். கட்டுகரைகள் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

கட்டுரை போட்டியில் பங்கேற்க விரும்புவரகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தில்லைத் தமிழ்ச்சங்கம், 49-128 கீழரதவீதி, சிதம்பரம், அலைபேசி எண்: 94440 23044, 99658 84099

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.