கோழியை காணாததால் ஏற்பட்ட தகாறில் ஒருவரை வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை
கோழியைக் காணாததால் ஏற்பட்ட தகாறில் அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்கோழியை காணாததால் ஏற்பட்ட தகாறில் ஒருவரை வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை
கோழியைக் காணாததால் ஏற்பட்ட தகாறில் அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம்
கோழியைக் காணாததால் ஏற்பட்ட தகாறில் அரிவாளால் வெட்டியவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
கூமாப்பட்டி, பிளவக்கல் அணையைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி தேவர் மகன் தெய்வேந்திரன் (32). இவர் வீட்டில் இருந்தபோது 15.1.2013-ம் தேதி, அங்கு அருகில் உள்ள பட்டுப்பூச்சி என்ற இடத்தைச் சேர்ந்த ராமர் மகன் சீனி என்பவர் கையில் அரிவாளுடன் வந்து, தெய்வேந்திரனிடம் என் கோழியைப் பார்த்தாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எங்கள் கோழிதான் உங்கள் வீட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற சீனி, தெய்வேந்திரனை வெட்ட முற்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த இவரது தம்பி தர்மர் தடுக்கவே, இவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இது குறித்து தெய்வேந்திரன் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனியைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், சீனிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.