முகப்பு
தற்போதைய செய்திகள்

தாஞ்சாவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: பணம், நகை கொள்ளை

தாஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

தாஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினம், மேலத்தெருவில் வசிப்பவர் முகமது முஸ்தப்பா (53), சென்னையில் கட்டிட கான்ரெக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி ரம்ஜான்தேவி (48).

கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் கண் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றார் முகமது. ஜூன் 3-ம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

உறவினர்கள் கொடுத்த தகவலின் படி, இன்று காலை வீட்டிற்கு வந்த முகமது அதிர்ச்சியடைந்தார். அதன்பின்பு அவர் வீட்டில் காணாமல் போன பொருள்கள் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →