விருதுநகர் அருகே கேப் வெடி ஆலை விபத்தில் தொழிலாளி காயம்
விருதுநகர் அருகே கேப்வெடி ஆலையில் இயந்திரத்தில் வேலை செய்யும் போது உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே கேப்வெடி ஆலையில் இயந்திரத்தில் வேலை செய்யும் போது உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே முதலிபட்டி அருகே தனியார் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை சிவகாசி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜா(35) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 10 அறைகளில் சனிக்கிழமை தொழிலாளர்கள் கேப் வெடிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதில், விருதுநகர் அருகே பட்டாம்புதூரைச் சேர்ந்த முனியசாமியின் மகன் செல்வராஜ்(35) என்பவர் கேப்வெடி தயார் செய்து இயந்திரம் மூலம் துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, கேப்வெடியில் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டது.
அதையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வச்சக்காரபட்டி போலீஸார் உரிமையாளர் தேசிங்குராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.