நடராஜர் தேவசபைக்கு மாற்றம் குறித்து தேவபிரசன்னம் பார்க்க வேண்டும்: சு.கைலாசசங்கர தீட்சிதர்
இதய ஸ்தானமான சித்சபையிலிருந்து, தேவசபைக்கு மாற்றுவது குறித்து உலக நன்மை கருதி அஷ்டமங்கள தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாலயம் செய்ய வேண்டும் என பொதுதீட்சிதர்களில்
இதய ஸ்தானமான சித்சபையிலிருந்து, தேவசபைக்கு மாற்றுவது குறித்து உலக நன்மை கருதி அஷ்டமங்கள தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாலயம் செய்ய வேண்டும் என பொதுதீட்சிதர்களில் ஒருவரான சு.கைலாசசங்கர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என ஆர்.யு.கனகசபை தீட்சிதர் பொதுதீட்சிதர்களின் கமிட்டியினரிடம் மனு கொடுத்தார். மனு மீது திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. வெறும் வர்ணம் மட்டும் பூசப்படுகிறது என கமிட்டியினர் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது பாலாலயம் என்ற பெயரில் ஸ்ரீநடராஜமூர்த்தியை இதுவரை வரலாறு காணாத விதமான வரையில் இதய ஸ்தானமான சித்சபையை விட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவசபையில் வைத்து பூஜையை மாற்ற உள்ளது. இத்தனை காலமாக செய்து வந்த பூஜை முறையை மாற்றி செய்வதால் ஏற்படும் தீமைகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது.
நாம் அனைவரும் சுட்டிக்காட்டி வாழ்ந்து வருகிற சிதம்பரம் ரகசியத்தை பாலாலயம் செய்தால், அவற்றின் ஸ்தானத்திற்கு யார் பூஜை செய்வது, இந்த செயல் சாஸ்திரத்திற்கு வினோதமானது. வாழ்வாதாரம் பாதிப்படையும். சித்சபையில் இரண்டு மாதத்தில் மிகப்பெரிய தவறு ஒன்று நடக்கப் போவதாக கேள்விபட்டேன். எனவே உலக நன்மை கருதி, கோயில் நன்மை கருதி அஷ்டமங்கள் தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாயம் செய்ய வேண்டும் என கோயில் பொதுதீட்சிதர்களிடம் மனு அளித்துள்ளேன் என சு.கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்தார்.