முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி மாநகராட்சி: உத்தேச வரவு செலவு கணக்கு தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் 2015- 16ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்கு இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2015 at 11:29 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:23 AM

திருச்சி மாநகராட்சியில் 2015- 16ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்கு இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான அவசரக் கூட்டத்துக்கு மேயர் ஜெயா தலைமை தாங்கினார். வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் வி. ஐயப்பன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதில்,

Advertisement

2015-16ஆம் ஆண்டு மொத்த வரவு ரூ.310.38 கோடி எனவும், மொத்த செலவு ரூ.323.53 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பற்றாக்குறை ரூ.13.14 கோடியாகும்.

அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்கள்:

2015-16ல் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் ரூ.12.10 கோடியில் அமைக்கப்படும்.

திறந்தவெளியில் மனிதக் கழிவுகள் கலப்பதை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.86 கோடியில் 13 புதிய பொதுக் கழிப்பறைகள் கட்டப்படும்.

ரூ.1 கோடியே 11 லட்சத்தில் 49 கழிப்பிடங்கள் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.123 கோடியில் திருச்சி மாநகராட்சி மற்றும் மணப்பாறை, துவாக்குடி, துரையூர் நகராட்சிகளை இணைத்து மண்டல அளவிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படும்.

தற்போதுள்ள அறியமங்கலம் குப்பைக் கிங்களில் ரூ.10 கோடியில் பசுமைக் குன்று அமைக்கப்படும்.. எனப் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ள.

எனினும், புதிய திட்டங்களோ, நவீன திட்டமோ எதுவுமில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.