முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரியின் குறுக்கே அணை: தடையை மீறி பேரணி சென்ற 1,500 பேர் கைது

காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து, காவல்துறையின்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து, காவல்துறையின் தடையையும் மீறி பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகள் உட்பட 1,500 பேர் தவளகிரி சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் பேரணியை இன்று காலை துவக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் இருந்து இந்த பேரணிப் புறப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணியில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் ஏராளமான உழவர்கள், சுமார் 15 தமிழ் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

பேரணியை முன்னிட்டு நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →