முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகரில் விபத்தில் சிக்கி பல்கலை மாணவர் சாவு

சிதம்பரம் நகரில் புதன்கிழமை காலை விபத்தில் பேருந்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் புதன்கிழமை காலை விபத்தில் பேருந்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தையாக்குப்பம் மெயின்ரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் குணசேகரன் (20). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக

உடற்கல்வித்துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை பயிற்சி வகுப்பு செல்வதற்காக மணலூரிலிருந்து சிதம்பரம் நகரம்

Advertisement

வழியாக பல்கலைக்கழக மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது கீழரதவீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தனியார் பேருந்தை முந்தும்

போது குறுக்கே வந்த குதிரை மோதியதில் நிலை தடுமாறி மாணவர் குணசேகன் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments